உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை பரீட்சை நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்!

Loading… 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் குறித்த பணிகள் ஆரம்பமாகியுள்ளது. Loading… அந்த வகையில் முதல் 6 நாட்களுக்கு தேவையான வினாத்தாள்கள் முதலில் விநியோகிக்கப்படவுள்ளதோடு பரீட்சை நடத்துவதற்கு தேவையான பணியாளர்களும் தயார்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை 2022ஆம் ஆண்டுக்கான பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் (திங்கட்கிழமை) ஆரம்பகாவுள்ளமை குறிப்பிடத்தககது. Loading…